• வெண்மதி சாரல்கள் | காகிதக் காதல் | Athavan Radio
    May 12 2026

    குழந்தை வளர வளர கற்றுக் கொண்டது சத்தம் வராமல் அழ' என்ற ஆழமான மானுட ரகசியத்தை அழகாய் இருவரிகளுக்குள் பொருத்த இவரால் முடிகிறது. இந்த தொகுப்பு முழுக்க. இது போன்ற ஈரக்கவிதைகளால் இதயத்தைக் கரைக்கும் கவிஞர் க.சரண் பாபு, நம் ரசனைகளின் வீதியில் கம்பீரமாக நடைபோடுகிறார்

    Mostra di più Mostra meno
    2 min
  • அஞ்ஞாடி | காகிதக் காதல் | Athavan Radio
    May 6 2026

    புதுவரவாக பூமணியின் “அஞ்ஞாடி” நாவல், ஒன்றரை நூற்றாண்டுகாலம், இருபெரும் சாதிக் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள், சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் வன்முறை, மனிதர்களை பிரிக்கும் வன்முறையிலும் ஒளிரும் நட்பு, மண்ணையும் மனிதர்களையும் பிரிக்கும் அன்றாட வாழ்வின் அற்புதங்கள்... பூமணியின் அற்புத நடையில் .. ஒரு விரிவான ஆய்வின் அடிப்படையில்.. தமிழின் முக்கியமான மற்றுமொரு நாவல்

    Mostra di più Mostra meno
    2 min
  • பாலங்கள் | காகிதக் காதல் | Athavan Radio
    May 6 2026

    'கஸ்தூரி ஸ்ரீனிவாசன்' விருது பெற்ற இந்த நாவலில் ஆசிரியர் மூன்று காலகட்டங்களில் நடக்கும் மூன்று விதமான கதைகள் கொண்டது. 1930-களில் உள்ள இந்துக் குடும்பத்து சம்பிரதாயங்களும், பழக்க வழக்கங்களும், சடங்குகளும் நம்மை அந்தக் காலத்துக்கே கூட்டிச் செல்கின்றன. 1960-களில் பெண்கள் பள்ளிக்குப் போகவும், மற்ற புதுமைகளை ஏற்க விரும்பும் ஒரு நடுத்தரக் குடும்பத்துக் கதையாகவும், 1980-களில் பெண்கள் எவ்வளவு தைரியமான மனப்போக்கு உடையவர்களாகவும், இந்நாவலில் மிக மிக அழகாக கூறியுள்ளார்.

    Mostra di più Mostra meno
    1 min
  • When things fall apart | காகிதக் காதல் | Athavan Radio
    May 5 2026

    அவளுடைய போதனையின் அழகான நடைமுறை தன்மை காரணமாக, Pema Chödrön சமகால அமெரிக்க ஆன்மிக எழுத்தாளர்களில், புத்தமதத்தினருக்கும் புத்தமதத்தைச் சாராதவர்களுக்கும் மிகவும் நேசிக்கப்படும் ஒருவராக மாறியுள்ளார்.

    1987 முதல் 1994 வரை அவர் வழங்கிய உரைகளின் தொகுப்பாக அமைந்த இந்த புத்தகம், நம் வாழ்க்கையில் வலி மற்றும் சிரமங்கள் அதிகரிக்கும் நேரங்களில் தொடர்ந்து வாழ்வதற்கான ஞானத்தின் பொக்கிஷமாகும்.

    Mostra di più Mostra meno
    1 min
  • மூன்றாம் உலகப் போர் | காகிதக் காதல் | Athavan Radio
    May 5 2026

    இப்போது ஒரு போர் தொடங்கி நிகழ்ந்துக்கொண்டே இருக்கிறது. இது முகத்துக்கு முகம் பார்த்து மோதாத போர்; ஆயுதங்களை ஒளித்துக்கொண்டு நிகழ்த்தும் போர்; மண்ணுக்கும் விண்ணுக்குமான போர்; மனிதனுக்கும் இயற்கைக்குமான போர். இது மனிதகுலம் சந்தித்திராத மோசமான முகமூடிப் போர்; புவி வெப்பமாதல் - உலகமயமாதல் என்ற இரண்டு சக்திகளும் வேளாண்மைக்கு எதிராக தொடுத்திருக்கும் விஞ்ஞானப் போர்.

    Mostra di più Mostra meno
    1 min
  • Quiet: The Power of Introverts in a World That Can't Stop Talking | காகிதக் காதல் | Athavan Radio
    May 5 2026

    What are the advantages of being an introvert? They make up at least one-third of the people we know. They are the ones who prefer listening to speaking; who innovate and create but dislike self-promotion; who favor working on their own over working in teams. It is to introverts—Rosa Parks, Chopin, Dr. Seuss, Steve Wozniak—that we owe many of the great contributions to society.

    In Quiet, Susan Cain argues that we dramatically undervalue introverts and shows how much we lose in doing so. She charts the rise of the Extrovert Ideal throughout the twentieth century and explores how deeply it has come to permeate our culture. She also introduces us to successful introverts—from a witty, high-octane public speaker who recharges in solitude after his talks, to a record-breaking salesman who quietly taps into the power of questions. Passionately argued, impeccably researched, and filled with indelible stories of real people, Quiet has the power to permanently change how you see yourself.

    Mostra di più Mostra meno
    2 min
  • கால் முளைத்த கதைகள் | காகிதக் காதல் | Athavan Radio
    Apr 8 2026

    இந்த புத்தகம் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் நாடோடி கதைகளின் தொகுப்பாகும். சிறுவர்களுக்காக எழுதப்பட்டிருந்தாலும், பெரியவர்களையும் கவரும் வண்ணம் மிக சுவாரசியமாக எஸ். ராமகிருஷ்ணன் இதனைத் தமிழாக்கம் செய்துள்ளார். முக்கிய சிறப்பம்சங்கள்: 80 கதைகள்: ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா என உலகின் 30-க்கும் மேற்பட்ட பழங்குடியின இனத்தவர்கள் வழிவழியாகச் சொல்லி வந்த 80 கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இயற்கையின் மர்மங்கள்: "நாய் ஏன் வாலை ஆட்டுகிறது?", "வானவில் ஏன் தோன்றுகிறது?", "நெல் எப்படி உருவானது?" போன்ற இயற்கையின் விந்தைகளுக்குப் பின்னால் இருக்கும் கற்பனை நயம் மிக்க காரணங்களை இக்கதைகள் விளக்குகின்றன. பாடப்புத்தகத்தில் ஒரு கதை: இந்தத் தொகுப்பில் உள்ள ஒரு கதை தமிழக அரசின் புதிய பாடநூலில் இடம்பெற்றுள்ளதால், தற்போது பள்ளி மாணவர்கள் மத்தியில் இந்தப் புத்தகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. உதாரணக் கதை (ஆந்தை ஏன் கூடு கட்டுவதில்லை?): இந்தத் தொகுப்பில் வரும் ஒரு கதையில், ஒரு ஆந்தை தனது சோம்பேறித்தனத்தால் கூடு கட்டத் தெரியாமல் குளிரில் நடுங்குவதும், ஒவ்வொரு முறையும் கூடு கட்ட முயலும்போது தூக்கத்தினால் அதை பாதியிலேயே விட்டுவிடுவதும் விவரிக்கப்பட்டுள்ளது. இது போன்ற எளிய மற்றும் நீதியுள்ள கதைகள் இப்புத்தகத்தில் நிறைந்துள்ளன.

    Mostra di più Mostra meno
    1 min
  • நாளை மற்றுமொரு நாளே ஜி நாகராஜன் | காகிதக் காதல் | Athavan Radio
    Apr 7 2026

    இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம். இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப்பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டாம்; ஏனெனில் அவனுக்கும் - நம்மில் பலருக்குப்போலவே - நாளை மற்றுமொரு நாளே!

    Mostra di più Mostra meno
    1 min